சிறையாத்தீவு களப்பு பகுதியில் கசிப்பு நிலையம் முற்றுகை – பெருமளவிலான பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட சிறையாத்தீவு களப்பு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையமொன்று இன்று(05) சனிக்கிழமை மாலை முற்றுகையிடப்பட்டு பொருட்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன.

கொக்கட்டிச்சோலை இராணுவப்புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலையடுத்துஇ இராணுவப்புலனாய்வு பிரிவினரும்இ முதலைக்குடா கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதுஇ ஒன்பது(09) வறல்களும்இ ஒரு சிலிண்டர்இ இரண்டு கேன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போதுஇ எவரும் கைதுசெய்யப்படவில்லைஇ குறித்த உற்பத்தி நிலையமானது ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள களப்பு பகுதியிலேயே இயங்கி வந்துள்ளமையுடன், தோணியில் பயணித்தே இந்நிலையத்தினை முற்றிகையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.