தமிழ் முஸ்லீம் அரசியல் வாதிகள் இணைந்து மக்களுக்கு அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் கல்முனை பிரதேச செயலக பிரச்சினை சாய்ந்தமருது நகர சபை பிரச்சினை நீண்ட காலமாக தொடர்ந்து வருகின்றது என கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எல். அன்ஸார் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று(15) நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் சமகால அரசியல் தொடர்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
கல்முனை பிரதேச செயலக பிரச்சினை சாய்ந்தமருது நகர சபை பிரச்சினை நீண்ட காலமாக தொடர்ந்து வருகின்றது.சாய்ந்தமருது நகர சபையை பெறுவதற்காக பலரும் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள்.இதற்கு ஒருவர் மாத்திரம் உரித்தானவர்கள் அல்லர் பலரும் செயற்படுகின்றனர்.பொதுவாக மக்கள் இருக்கின்றார்கள்.கல்முனை மக்களுக்கு பாதிப்பில்லாதவாறு சாய்ந்தமருதுவிற்கு சபை கிடைக்க வேண்டும் என்பதில் பலரும் உறுதியாக இருக்கின்றார்கள்.இது தான் நியாயம் தர்மம்.இந்த அடிப்படையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவர்கள் எங்களுடைய முஸ்லீம் பகுதிகளுக்கு சபை கிடைக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் பேசியிருந்தார்.