இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் தலைமையின் கீழ் போரின்போது கால்களை இழந்த முன்னாள் விடுதலைப்புலி போராளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கும் திட்டத்தை இலங்கை ராணுவம் நேற்று அறிமுகப்படுத்தியது.
இதற்கமைய 64 முன்னாள் போராளிகள் பேருக்கு குறித்த செயற்கை கால்கள் வழங்கப்பட்வுள்ளது.
குறித்த நபர்களில் முன்னாள் பெண் போராளி ஒருவரும் உள்ளடங்கியுள்ளார்.
பலர் முழங்காலுக்குக் கீழே உள்ள பகுதியை இழந்துள்ள நிலையில் மேலும் சிலர் முழுமையாக தமது கால்களை யுத்தத்தில் இழந்துள்ளனர்.
எவ்வாறாயினும், யுத்தம் முடிவடைந்த பின்னர் புனர்வாழ்வுப் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் நல்லிணக்கத்தை எவ்வாறு அடைய முடியும் என்பதை இலங்கை இராணுவமே நடைமுறையில் நிரூபித்துள்ளது என்று இலங்கை ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகமொன்றுக்குதெரிவித்துள்ளார்.
அவர்கள் இனி எங்கள் எதிரிகள் அல்ல என்றும், அவர்கள் எம் சமூகத்தின் ஒரு அங்கமாக கருதப்படுகிறார்கள் என்று இராணுவ தளபதி குறிப்பிட்டார்.
போர்க்களத்தில் அவர்கள் எங்களுக்கு எதிராகப் போராடிய போதிலும், அவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள் என்பதாலும் புனர்வாழ்வு திட்டத்திற்கு பொருள் கொடுக்கப்பட வேண்டும் என்பதாலும் அனைவருக்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இதுபோன்ற ஒரு திட்டம் முன்மொழியப்பட்டது என்றும் இராணுவத்தளபதி தெரிவித்தார்.
இலங்கையில் நல்லிணக்கம் குறித்து கேள்விகளை எழுப்புவோர் நாட்டில் நல்லிணக்கம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதை தங்கள் கண்களால் பார்க்க முடியும் என்று ராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.
LNW