மன்னாரில் அருட்தந்தை செபமாலை அடிகளார் வாசித்த ஊடக அறிக்கை.

  குமணன்
வடகிழக்கு மாகாணங்களில் சிவில் அமைப்புக்கள் முன்னெடுக்கும் போராட்டமானது 2009 ஆயுதம் மௌனிக்கப்பட்ட  பின்னர் வடக்கு கிழக்கு தமிழர்  தாயக பகுதிகளில் கட்டவிழ்த்து விடப்பட்ட ஈழ  படுகொலையை முன்னிறுத்தியும் ,தமிழின படுகொலைக்கு நீதி வேண்டியும் முஸ்லிம் மலையக ஈழ தமிழரின் கூட்டிருமையை வலியுறுத்தியும் நீதிக்கான பேரணி நான்காவது நாளாக மன்னாரில் வந்தடைந்துள்ளது.

சிங்கள அரசு சிறிலங்காவை சிங்கள பௌத்த ஒருமை பண்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான காலணித்துவ செயற்பாடுகளை வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதிகளில் அரசியல் நிகழ்ச்சி திட்டத்தினூடும் , அரசு இயந்திரத்தினோடும் நிரல் படுத்தியும் செயல்படுத்தியும் வருகின்றது.
தமிழ் தேசிய அரசியலை நீக்கம் செய்து பல்வேறு நரம்புகளும் செய்து வருகின்றது என்பது யாவரும் அறிந்து . ஈழ தமிழரின் எழுர்ச்சி என்பது வரலாற்று அரசியல் காலகட்டத்தில் இன்றியமையாதது. ஈழ தமிழர் இருப்பை உறுதி செய்தல். சிறிலங்கா சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் உரித்தானது அல்ல என்று கூறிக்கொள்வதோடு தம்மை எண்ணிக்கையில் குறைவாக உள்ள மக்களின் நாடு என்று கூறிக்கொள்வதோடு  இதனை வலியுறுத்தி கொள்கின்றோம் .
ஈழ தமிழினம் தனது இருப்பிற்காக வெளியிலிருந்து வரும் எதிர்ப்புகளை பல தசாப்தங்களாக சந்தித்து வரும் பல போராட்ட வடிவங்களை பெற்றுள்ளது . ஈழ தமிழினத்திற்கான பேராதரவு அதிகரித்து வருகின்ற நிலையில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு அரசியல் பாகுபாடு இன்றி சிவில் அமைப்பினருக்கு  எத்தடை வரினும்  ஒத்துழைப்பு வழங்குமாறு ஊடக அறிக்கை அருட்தந்தை செபமாலை அடிகளார் மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு முன்பாக வாசித்தார் .