2021 புதிய வருடத்தில் பாடசாலை ஆரம்பிப்பதற்க்கான கூட்டம் மட்/மமே/முதலைக்குடா மகா வித்தியாலய மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை 9.00 மணிக்கு அதிபர் ரி.கோபாலப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் 2021.01.11ம் திகதியில் பாடசாலை ஆரம்பிப்பதற்க்கும் , கொவிட் 19 நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பாக மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்க்குமான வழிமுறைகள் ஆராயப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சுகாதார நடைமுறைகளையும் வழிகாட்டல்களையும் பின்பற்றிக் கொண்டு மாணவர்கள் கல்விச் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தன் அவசியத்தையும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுச்சுகாதார உத்தியோகஸ்தர் எஸ்.ரவிச்சந்திரன் தெளிவு படுத்தினார்.
இக் கூட்டத்தில் பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஜசோதரன் , கிராம சேவை உத்தியோகஸ்தர், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இழந்த கல்வியை மீளப் பெறுவதாயின் மாணவர்கள் பாதுகாப்புடன் ஒழுங்காக பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் எனவும் பெற்றோருக்கு வலியுறுத்தி கூறப்பட்டது.
அத்தோடு அரசினால் வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுக்கான வேலைத்திட்டங்கள் சம்பந்தமாகவும் பெற்றோருக்கு தெளிவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.