இந்த ஆண்டு மூன்று கட்ட திட்டத்தின் மூலம் சுமார் 800,000 பாடசாலை மாணவர்களுக்கு இலவச சுகாதார நாப்கின்களை வழங்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது, கிராமப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கல்வியமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கல்வி அமைச்சின் ஊடகச் செயலாளர் இது உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் ஒரு பகுதியாகும், மேலும் கிராமப்புற பாடசாலைகளுக்கு வழங்கப்படும் முன்னுரிமை, சுகாதார நாப்கின்களின் மலிவு மற்றும் அணுகலுடன் அதிக சிக்கல்களை எதிர்கொள்வதே இதற்குக் காரணம்.
“இந்த திட்டம் பின்னர் நடுத்தர அளவிலான பாடசாலைகளில் கவனம் செலுத்தும். இறுதியாக, நகர்ப்புற பாடசாலைகளுக்கும் இலவச சுகாதார நாப்கின்கள் வழங்குவது குறித்து விவாதிக்கப்படும். எவ்வாறாயினும், இந்த ஆண்டு இறுதிக்குள் தேவைப்படும் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இலவச சுகாதார நாப்கின்களை வழங்குவோம் என்று நாங்கள் நம்புகிறோம என தெரிவித்தார்..