மட்டு பெற்றோலிய கூட்டுத்தாபன காத்தான்குடி ஊழியர் ஒருவருக்கும் கொரனாதொற்று

மட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு இன்று காலை மேற்கொண்டஅன்ரிஜன் பரிசோதனையின்போது ஒருவர் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

தொற்றுக்குள்ளானவர்  காத்தான்குடியைச்சேர்ந்த 48 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது கூட்டுத்தாபனத்தை சேர்ந்த ஊழியர்கள் 08பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது காத்தான்குடியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 07ஈக அதிகரித்துள்ளதுடன் மட்டக்களப்பில் தொற்றின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது.