மட்டக்களப்பில் 2020-21 ஆம் ஆண்டிற்கான பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான மானிய உர விநியோகம் கிரமமாக இடம்பெற்றுவருகின்றது. இம்முறை பெரும்போக நெற்செய்கை பண்ணப்பட்டுள்ள விவசாய நிலங்களில் 60 ஆயிரத்தி 87.5 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான 16 ஆயிரத்தி 878 மெற்றிக் தொன் மானிய உரம் 20 ஆயிரத்தி 975 விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட உரச் செயலக உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம். சிராஜுதீன் தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவிவருகின்ற நிலையிலும் அப்பாதிப்புக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெளுப்பும் செயற்றிட்டத்திங்களை அரசும் விவசாய அமைச்சும் முன்னெடுத்து வருகின்றது. இதேவேளை இம்மானிய உரங்களை கொழும்பிலிருந்து கொண்டு வருவதில் பல சவால்களை எதிர்கொள்கின்ற அதே வேளையில் விவசாயிகளுக்கான மானிய உரங்கள் கிரமமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்ட கமநலசேவைகள் நிலையத்தினால் சுமார் 50 வீதத்திற்கும் அதிகான உரங்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன. இவற்றில் யூரியா, ரீ.எஸ்.பீ மற்றும் எம்.ஓ.பீ ஆகிய உரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
மட்டக்களப்பில் 2020-21 ஆம் ஆண்டிற்கான பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான மானிய உர விநியோகம் கிரமமாக இடம்பெற்றுவருகின்றது. இம்முறை பெரும்போக நெற்செய்கை பண்ணப்பட்டுள்ள விவசாய நிலங்களில் 60 ஆயிரத்தி 87.5 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான 16 ஆயிரத்தி 878 மெற்றிக் தொன் மானிய உரம் 20 ஆயிரத்தி 975 விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட உரச் செயலக உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம். சிராஜுதீன் தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவிவருகின்ற நிலையிலும் அப்பாதிப்புக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெளுப்பும் செயற்றிட்டத்திங்களை அரசும் விவசாய அமைச்சும் முன்னெடுத்து வருகின்றது. இதேவேளை இம்மானிய உரங்களை கொழும்பிலிருந்து கொண்டு வருவதில் பல சவால்களை எதிர்கொள்கின்ற அதே வேளையில் விவசாயிகளுக்கான மானிய உரங்கள் கிரமமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட கமநலசேவைகள் நிலையத்தினால் சுமார் 50 வீதத்திற்கும் அதிகான உரங்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன. இவற்றில் யூரியா, ரீ.எஸ்.பீ மற்றும் எம்.ஓ.பீ ஆகிய உரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.