மஞ்சந்தொடுவாய் நெசவு நிலைய குறுக்கு வீதிதார் வீதியாக

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் நெசவு நிலைய குறுக்கு வீதியானது சப்றிகம நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தார் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அரசாங்கத்தின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சம்மிக்க நோக்கு எனும் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக, கிராமிய அபிவிருத்தியினூடாக நாட்டை அபிவிருத்தி செய்தல் எனும் தொணிப்பொருளில் நிதி மற்றும் பொருளாதார, கொள்கைத் திட்டமிடல் அமைச்சினால் நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சப்றிகம நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மஞ்சந்தோடுவாய் நெசவு நிலைய குறுக்கு வீதியானது 1.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தார் வீதியாக செப்பனிடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

மட்டக்களப்பு மாநகர சபையினால் நேரடியாக மேற்கொள்ளப்பட்டு வரும் மேற்படி வீதிப் அபிவிருத்தி பணிகளை இன்று (21.09.2020) மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்களான திருமதி வர்னேஷ்வரி ரவிச்சந்திரன், ம.நிஷ்கானந்தராஜா,  த.இராஜேந்திரன், துரைசிங்கம் மதன், தொழிநுட்ப உத்தியோகத்தர்  எம்.ஏ.ஏம் றிஸ்வான் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின்  அபிவிருத்தி உத்தியோகத்தர்  ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.