மோட்டார் சைக்கில் இறக்குமதி செய்வதில் உள்ள தடையினை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்

 – இருசக்கர வாகன விற்பனையாளர் முகவர் சங்கம் கோரிக்கை
(மட்டக்களப்பு நிருபர்)
அரசாங்கம் மோட்டார் சைக்கிள் இறக்குமதி செய்வதில் ஏற்படுத்தியுள்ள தடையினை மறுபரிசீலனை செய்யவேண்டுமென அகில இலங்கை புதிய இருசக்கர வாகனங்களின் விற்பனை முகவர் சங்க கிழக்கு மாகான பிரதிநிதி ஐயாசாமி ராமலிங்கம் மட்டக்களப்பில் இன்று (31) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தனர்.
நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கட்டுப்பாட்டினை அரசாங்கம் விதித்துள்ளது. இதில் டொலர் பெறுமதியில் ஏற்பட்டுள்ள தளம்பலினை நிலையானதாக பேனுவதற்காக இருசக்கர வாகனங்களின் இறக்குமதியில் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன்காரணமாக  இறக்குமதி செய்யப்படும் இருசக்கர வாகனங்களை நம்பி தொழில் செய்யும் நாங்களும், எம்மிடம் தொழில்புரியும் தொழிலாளர்கள், திருத்த வேலைசெய்யும் தொழிலாள்லகள், நேரடியாகவும், மறைமுகமாவும் இத்தெழிலில் தங்கி வாழும் பலரினது குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஜனாதிபதி அவர்களினால் வழங்கப்பட்ட 4 வீத கடன் தொகையினைப் பெற்றே இத்தொழிலினை நாங்கள் செய்து வருகின்றேம். இத்தடை காரணமாக இக்கடண் தவனைக் கட்டணங்களையும் செலுத்தமுடியாதுள்ளது. எனவே அதியுத்தம ஜனாதிபதி இவ்விடயத்தில் கவனஞ்செலுத்தி இருசக்கர வாகண இறக்குமதியில் ஏற்படுத்தியுள்ள தடையினை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்வதாக இகில இலங்கை புதிய இருசக்கர வாகனங்களின் விற்பனையாளர் முகவர் சங்க கிழக்கு மாகாண கிளை பிரதிநிதி ஐயாசாமி ராமலிங்கம் ஊடகஙங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.
இவ்வூடகவியலாளர் மாநாட்டில் கிழக்கு மாகானத்தில் உள்ள புதிய இருசக்கர வாகனங்களின் விற்பனை முகவர்கள் பலரும் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்