தமிழ் மக்கள் பயங்கரவாதிகளுமல்ல முஸ்லிம் மக்கள் அடிப்படைவாதிகளுமல்ல.பசீர் ஷேகுதாவூத்

தமிழ் மக்கள் பயங்கரவாதிகளுமல்ல முஸ்லிம் மக்கள் அடிப்படைவாதிகளுமல்ல என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் ஷேகுதாவூத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் மட்டக்களப்ப வொயிஸ் ஒப் மீடியா நிலையத்தில் 18.07.2020 சனிக்கிழமை நடாத்திய ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் ஊடகவியலாளர்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் நடாத்திய கலந்துரையாடல் நிகழ்வின் போது அவர் மேற் கண்டவாறு கூறினார்.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் சிரேஷ்ட ஆலோசகர் இ.பாக்கியராசா தலைமையில்; நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் முன்னாள் அமைச்சர் பசீர் ஷேகுதாவூத் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறீநேசன், அகில இலங்கை தமிரசுக்கட்சியின் செயலாளரும் முன்னாள்; பாராளுமன்ற உறுப்பினருமான கே.துரைராஜ சிங்கம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் தேவ அதிரன், தொழில் சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் பெரி கமகே உட்பட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பசீர் ஷேகுதாவூத் தமிழ் மக்கள் பயங்கரவாதிகளுமல்ல முஸ்லிம் மக்கள் அடிப்படைவாதிகளுமல்ல சிறுபான்மை மக்களுடைய பிரச்சினைகளை சரியாக கையாள்கின்ற வகையிலே ஒரு கூட்டு முன்னணியாகவும் செயற்பட நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

அவ்வாறான நிலையில்; பெரும்பான்மையாகவும் சிறுபான்மையாகவும் இருக்கின்ற மக்களுக்குள் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களோடும் கட்சிகளோடும் நாங்கள் இணைந்து செயலாற்றுவதற்கு தயாராக இருக்கின்றோம்.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இந்த முயற்சியை புதிய முற்சியாகவும் முற்போக்கான முயற்சியாகவும் பார்க்கின்றோம்.

நிச்சயமாக ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளை நாடாளுமன்ற அரங்கத்தில் மாத்திரமல்ல வெளியிலும் பேச முடியும்

இந்த அரசியலிலே பகிரங்மான மேடைகள் என்றும் இரகசியமான மேடைகள் என்றும் இரண்டு மேடைகள் இருக்கின்றன.

பரகசியமான மேடைகள் என்பது வெறும் கூக்குரலாக ஒப்பாரியாக இருப்பதைத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.

உண்மையில் இரகசியமான மேடையில் பல தீர்மானங்கள் மேற் கொள்ளப்படுகின்றன.

அந்த இரகசியமான மேடையில் நிமிர்ந்த குரலாக கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களின் குரலாக நாங்கள் இருப்போம் என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

நாங்கள் எப்போதும் பெரும்பான்மை சமூகத்தினரோடு பேசிவருவது வெறுமனே ஒரு பிரச்சாரத்திற்காக வெளியிலே மக்கள் எங்களை கை கொட்டி ஆரவாரிக்க வேண்டுமென்ற அரசியலை நாங்கள் ஒரு போதும் செய்வதில்லை.

இவைகளை கைவிட்டு விட்டுத்தான் புதிதாக கிடைத்த அனுபவத்தின் அடிப்படையிலும் சுமார் 35 ஆண்டுகள் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையிலும் புதிதான வரைபுகளை செய்து கொண்டு புதிய சூழ் நிலைக்கு ஏற்ற வகையிலே அரசியலை முன்னெடுத்து வருகின்றோம்.

அந்த தருணங்களில் அந்த அரங்கத்தில் உங்களுடைய குரலாக இருப்போம்.

ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளை யாரும் யாருக்கும் எழுதிக் காட்டத்தேவையில்லை.

ஊடகவியலாளர்கள் இந்த நாட்டிலே உள்ள மக்களின் பிரச்சினைகளை வெளியில் கொண்டு வருபவர்கள் அரசியல் வாதிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் எழுதுகின்றவர்ககள் தங்களுடைய பிரச்சினைகளை இவ்வளவு காலமும் எழுதாமல் இருந்திருப்பார்களா?

சரியாக வாசித்தால் சரியாக செய்திகளை கேட்டால் சரியாக புரிந்து கொள்ளும் ஞானமிருந்தால் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளுக்கு விஷேடமான அரங்கு தேவையில்லை.

எனவே எதிர் காலத்தில் ஊடகவியலாளர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்