சுவிஸ்நாட்டில் மட்டக்களப்பு மக்களின் தேர்த்திருவிழா.

சுவிஸ்ட்ஸர்லாந்து சூரிச் மாநிலத்தில் அமைந்துள்ள விஸ்ணு துர்க்கையம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 21ம்திகதி செவ்வாய்க்கிழமை வைரவர் மடை பூசையுடன் நிறைவடையவுள்ளது.

வருடாந்த மாகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா 18ம் திகதி சனிக்கிழமை காலை10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இத்தேர்திருவிழாவினை  சுவிஸ்நாட்டில்வாழும் மட்டக்களப்பு முன்னெடுத்து  நடாத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தீர்த்தஉற்சவ நிகழ்வு 19ம் திகதி காலை நடைபெறவுள்ளது.