வி.சுகிர்தகுமார்
ஆலயத்தின் உற்சவம் இம்மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இடம்பெறும் சிரமதானப்பணிகளை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சமூக அமைப்புக்களும் திணைக்களங்களும் நிறுவனங்களும் முன்னெடுத்து வருகின்றன.
இதற்கமைய ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் மிகவும் முக்கியத்துமான பல சிரமதானப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைவாக ஆலயத்தின் அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கத்தின் தலைமையில் ஆலோசகரும் ஓய்வு பெற்ற அம்பாரை மாவட்ட உள்ளக் கணக்காய்வாளருமான எஸ்.கனகரெத்தினம் வழிகாட்டலில் ஒன்றிணைந்த 50இற்கும் மேற்பட்ட தொண்டர்கள் உள்வீதியில் இருந்த பழைய மணலை அகற்றி நான்கு உழவு இயந்திரங்களின் உதவியோடு புதிய மணலை இட்டு உள்வீதியை நிரப்பும் பணியில் ஈடுபட்டனர்.
அத்தோடு யாத்திரிகர்கள் தங்குவதற்கு வசதியான முறையில் ஆலய வளாகத்தில் இருந்த பற்றைகள், குப்பைகள் அகற்றப்பட்டதுடன் நீராடுவதற்கு பயன்படுத்தும் கிணற்றை அண்டிய பகுதிகளையும் தூய்மைப்படுத்தினர்.
ஆலய உற்சவம் எதிர்வரும் ஜுலை மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாவதுடன் உற்சவமானது ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதியுடன் நிறைவறுகின்றமை
குறிப்பிடத்தக்கது.