கடந்த முறை கணேசமூர்த்தி இறுதி நேரத்தில் இணைந்து வெற்றிக்கு வித்திட்டது போல இம்முறையும் எமக்கு ஆசனம் உறுதி.

ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

(ஏறாவூர் கபூர்)

கல்குடாவின் பிரதிதித்துவம் இம்முறை பாதுகாக்கப்படுவதென்பது நீண்ட பரம்பரைக்கு காவுகோலாக அமையும் மிகப்பெரிய முயற்சியாக மாறும்  எனவும் இதற்காக கடந்த பொதுத் தேர்தலை விடவும் இரட்டிப்பு மடங்கு செயற்பட வேண்டும்.

என முன்னாள் இராஜாங்க அமைச்சரும்,ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு

மாவட்ட வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு மக்களுடன் இடம்பெற்ற தேர்தல் பிரசார கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கல்குடாவின் பிரதிதித்துவம் இம்முறை பாதுகாக்கப்படுவதென்பது நீண்ட பரம்பரைக்கு காவுகோலாக அமையும் மிகப்பெரிய முயற்சியாக மாறும்  எனவும் இதற்காக கடந்த பொதுத் தேர்தலை விடவும் இரட்டிப்பு மடங்கு செயற்பட வேண்டும்.

கடந்த வருடம் சஹ்ரானுடைய குண்டு வெடிப்பின் பின்னர் கிழக்கு கட்டளைத்தளபதியிடம் தன்னை பணயம் வைத்து பிற பிரதேசங்களை போன்று பள்ளிவாயல்களுக்குள் நாய்களை கொண்டு வராமலும் குர்ஆன்கள் வீசப்படாமலும் பர்தாக்களையும் பள்ளிவாயல்களையும் உலமாக்களையும் குர்ஆன்களையும் பாதுகாக்க முடிந்தது என்றால் அதற்கு இறைவனின் உதவியுடன் கடந்த பொதுத் தேர்தலில் இந்த மக்கள் எனக்கு இட்ட புள்ளடிகளால் கிடைத்த அதிகாரத்தினாலே இயலுமானது.

தேர்தல் பிரச்சாரங்களின் போது எதிரணியினர் அமீர் அலியால் ஒரு அங்குலம் காணியேனும் மீட்கப்பட்டதா என்று கேள்வி கேட்பவர்கள்,

கடந்தகாலத்தில் இது தொடர்பாக தன்னால் பாராளுமன்றத்தில் காணி பிரச்சினைகள் சம்பந்தமான பாராளுமன்ற விவாதங்களை அறியாதவர்களாகவே இன்னும் இருக்கின்றார்கள்  எனவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காலத்திலேயே தான் சகல காணிகளும் இழக்கப்பட்டதென்பது கூட தெரியாமல் சிறு பிள்ளைகளாக இருக்கின்றார்கள்.

காணி விடயங்கள் சம்பந்தமாக இதுவரை புத்திஜீவிகள் அரசியல் பிரமுகர்களுடன் நடாத்தப்பட்டிருக்கின்ற 57 கூட்டங்களில் ஒன்றிலும் பங்குபெறாதவர்கள் இப்போது எம்மை நோக்கி விரலை நீட்டுவது என்பது நகைப்புக்குரிய விடயம்.

இம்முறை பொதுத் தேர்தலில் சஜித் பிரேதாஸவுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில்  இனைந்து கேட்பதற்கு வாக்குறுதியளித்திருந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தன்னையும் சஜித் பிரேமதாஸவையும் கடைசி நேரத்தில் ஏமாற்றினார்.

கடந்த முறை கணேசமூர்த்தி இறுதி நேரத்தில் இணைந்து வெற்றிக்கு வித்திட்டது போல இம்முறை தேர்தல்களத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி இணைந்து கொண்டதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சஜித் பிரேமதாஸவின் டெலிபோன் சின்னத்திற்கு ஆசனம் உறுதியாகி இருப்பதாகவும் வாக்குறுதியளித்தபடி நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் பொறியியலாளர் அப்துர் ரஹ்மானும் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு பிரவேசிப்பார்.

தற்பொழுது தேர்தலை மையப்படுத்தி கல்குடாவில் எதிரணி அயலூர் வேட்பாளர்கள் இரவு நேரங்களில் பொதிகள் வழங்குபவர்களாகவும் சவூதியிலிருந்து  வந்தபணங்களை பங்கிடுகின்றவர்களாகவும் இருப்பவர்கள் ஒரு வேலை வெற்றி பெற்றால் வருங்காலத்தில் இந்த சமூகத்தை பணம் படைத்த முதலாளிகள் தங்களுடைய பணங்களால் ஆட்சி செய்யும் துர்ப்பாக்கியமான நிலைமையும் ஏற்படக்கூடும் என்றார்.

குறித்த கலந்துரையாடலில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைஉறுப்பினர்களான எம்.நௌபர், எம்.ஜௌபர், முன்னாள் தவிசாளர் கே.பி.எம்.ஹமீட்,கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகஉறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.