சாணக்கியனின் தேர்தல் உத்திகள்.

 

(எருவில் துசி) நாடாளுமன்ற தேர்தல் எட்டாம் மாதம் 5ந் திகதி அறிவித்துள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தமிழ் அரசு கட்சி சார்பாக போட்டியிடும் இரா. சாணக்கியன் அவர்கள் தமது பிரசார கூட்டத்தினை இன்று(14) அவரின் அலுவலகத்தில்   ஆரம்பித்தார்.

பட்டிருப்பு தொகுதியை மையப்படுத்தி தனது முதல் கட்ட செயற்பாடாக பட்டிருப்பு தொகுதிக்குட்பட்ட தனது ஆதரவாளர்களை  அழைத்து தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பிரச்சார உத்திகளையும் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதுபற்றியும் தனது ஆதரவாளர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். இவ்வாறான கருத்தாடல்கள் எதிர் காலத்தில் ஏனைய இரு  தொகுதிகளிலும் நடாத்துவதற்கு உள்ளதாகவும் கருத்துரைத்ததார். நிகழ்வில் பலநூறு தெரிவு செய்யப்பட்ட ஆதரவாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.