சர்வதேச சூழலியல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் கரையோர கண்டல் தாவர மர நடுகை நிகழ்வு நேற்று நடைபெற்றது
சர்வதேச சூழலியல் தினத்தை முன்னிட்டு சர்வதேச சூழல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் கரையோர சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
கிழக்குமாகாண சூழியல் நீதிக்கான அமைப்பின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் கரையோர சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நடுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது
அந்தவகையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட சுற்றாடல் பேனல் திணைக்களம் ஆகியவற்றுடன் கிழக்குமாகாண சூழியல் நீதிக்கான அமைப்பு இணைந்து மட்டக்களப்பு வாவிக்கரையினை அண்டிய கரையோர பகுதிகளில் கண்டல் தாவர மர நடுகையினை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன . அதன் ஆரம்ப நிகழ்வு நேற்று வாவிக்கரை பகுதிகளில் நடைபெற்றது . மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் சூழலியல் அமைப்பின் பணிப்பாளர் , கிழக்குமாகாண சூழியல் நீதிக்கான அமைப்பின் உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர் , சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் , கரையோர பேனல் திணைக்கள உத்தியோகத்தர்கள் , புளியந்தீவு மேற்கு கிராம சேவை உத்தியோகத்தர் , பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு கண்டல் தாவர மரங்களை நாட்டுவைத்தனர்