(லியோன்)
இனம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தை சந்திரா அடிகளாரின் 32 வது ஆண்டு நிறைவு தின நிகழ்வு நேற்றுஉணர்வுபூர்வமாக மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது
1987 மற்றும் 1988 ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்ட மதகலவரங்களின் போதும் இந்திய அமைதிகாக்கும் படை இலங்கைக்கு வந்த போதும் இன நல்லுறவுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து இன மத மக்களை பாதுகாக்கும் மனிதாபிமான செயல்பாட்டி தந்து ஆன்மீக வாழ்வினை அர்பணித்த அருட்தந்தை 1988 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் திகதி இனம் தெரியாத ஆயுத தாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார்
சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தை சந்திரா அடிகளார் 32 வது ஆண்டு நிறைவு நிகழ்வு நேற்று விசேட ஜெப வழிபாடுகளுடன் மட்டக்களப்பு மரியாள் பேராலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அடிகளாரின் சமாதியில் மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது
இந்த நினைவு அஞ்சலி நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை எ .தேவதாசன் , மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் பங்கு தந்தை சி ,வி , அன்னதாஸ் ,உதவி பங்கு தந்தை , அருட்சகோதரர்கள் , அருட்தந்தையர்கள் அருட்தந்தையின் உறவினர்கள் , பங்கு மக்கள் , பொதுநிலையினர் என பலர் கலந்துகொண்டனர்