த.தே. கூட்டமைப்பு மட்டு மாவட்ட வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார்
முன்னாள் போராளிகளே தற்போது நமது சமுகத்தின் பிரதானிகள் இவர்கள் தங்கள் அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர். அவர்களது தேவைகளை உணர்ந்து பொருளாதாரம் குடும்பவாழ்வியலில் முன்னேற்றம் போன்ற தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களுடன் இணைந்து எதிர்காலத்தில் பயணம் செய்யவுள்ளேன் அதற்காக என்னிடம் பல்வேறு திட்டங்கள் உள்ளன.
இவ்வாறு தெரிவித்தார் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியகூட்டமைப்பின் வேட்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபருமாகிய மாணிக்கம் உதயகுமார்.
ஊடகவியலாளர் சாமித்தம்பி ரவிந்திரனுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அச்செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளதாவது
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்விநிலையினை உயர்த்துவதற்கு எமது கல்வியலாளர்கள் கல்விச்சமுகம் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் . நமது மாவட்டத்தின் மேற்குப்பகுதியில் உள்ள பாடசாலைகளில் இடைவிலகள் அதிகமாக காணப்படுவதையும் நாம் அவதானிக்கின்றோம்.
நமது கல்விமுறை பரீட்சைக்கான கல்விமுறையன்றி இளைஞர்களுக்கு வருமானம் ஈட்டக்கூடிய திட்டங்களை அறிமுகப்படுத்த வேணடும்.
அரசியல் ரீதியாக தற்போதுள்ள இளைஞர் யுவதிகளுக்கு பிழையான கருத்துக்களை விதைத்து அவர்களை திசை விருப்ப சிலர் முயல்கின்றனர்.கடந்த காலத்தில் அரசுடன் இணைந்து செயற்பட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்த நிலையான அபிவிருத்திகள் எவை எத்தனையாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளார்கள் என்ற வினா எழும்புகின்றது.
தற்போது இளைஞர்கள் மத்தியில் அபிவிருத்தி என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. எம்மைப்பொறுத்தவரை சோரம் போகாத அபிவிருத்தியுடன் எமது மக்களின் உரிமையினை வென்றெடுக்க பயணிப்பது. இதுவே எங்கள் இலக்கு.
தமிழ்தேசியகூட்டமைப்பு ஆதரவாக செயற்படுகின்றேன் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நான் ஓய்வு பெற சில மாதங்கள் இருந்தும் என்னை இடமாற்றம் செய்தார்கள் அலுவலக ரீதியாகஎதுவித குற்றச்சாட்டுமின்றி என்னை இடமாற்றம் செய்தது எனக்கு மனவுளைச்சலை ஏற்படுத்தியது அதனால் முன் கூட்டியே ஓய்வு பெற்றேன்.
தமிழ்தேசியகூட்டமைப்பு மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்பது ஏற்றுக்கொள்ளமுடியாக குற்றச்சாட்டு எனது காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கூடுதலான நிதியினை பெற்றுத்தந்தவர்கள் அவர்களே தற்போதைய சூழ்நிலையில் ஐ.நா வரை நமது மக்களின் பிரச்சினைகளை இராஜதந்திர ரீதியில் அணுகுபவர்கள் கூட்டமைப்பினரே.
எனது காலப்பகுதியில் மட்டு மாவட்டஅபிவிருத்திக்காக வந்த நிதிகள் திரும்பிச்சென்றது என்பது தவறான குற்றச்சாட்டு இது சம்பந்தமான விபரங்களை மக்கள் தகவல் அறியும்சட்டத்தின் கீழ் மாவட்டசெயலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
.